எட்டுத்தொகை நூல்கள் :
- எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர்.
- எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம்.
- பெரும் பாடல் ஒன்று கூறுகிறது.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத்தொகை
- எட்டுத்தொகை நூல்கள் - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு.
- எட்டுத்தொகையில் அகம் பற்றிய நூல்கள் - 5 (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு).
- எட்டுத்தொகையில் புறம் பற்றிய நூல்கள் - 2 (பதிற்றுப்பத்து, புறநானூறு).
- எட்டுத்தொகையில் அகமும் புறமும் கலந்த நூல் - 1 (பரிபாடல்).
- எட்டுத்தொகையில் நானூறு என்னும் எண்ணிக்கையில் குறிக்கப்படும்.
- நூல்கள் = 4 (நற்றிணை நானூறு, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை நானூறு).
- எட்டுத்தொகையில் எண்ணிக்கையால் பெயர் பெறாத நூல்கள் - 2 (கலித்தொகை, பரிபாடல்).
- கலிப்பா வகையால் ஆன நூல் - கலித்தொகை.
- பரிபாட்டு வகையால் ஆன நூல் - பரிபாடல்.
- மற்ற ஆறு நூல்களும் ஆசிரியப்பாவால் ஆனது.
- முதலும் முடிவும் கிடைக்காமல் இருக்கும் எட்டுத்தொகை நூல்கள் - 2 (பதிற்றுப்பத்து, பரிபாடல்)
- எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் முந்தியது - புறநானூறு
- எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் பிந்தியது - பரிபாடல், கலித்தொகை
- எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலாக தொகுக்கப்பட்ட நூல் - குறுந்தொகை.
நற்றிணை :
பாடல்கள் : 400.
புலவர்கள் : 175.
அடிகள் : 9-12.
பொருள் :அகம்.
தொகுத்தவர் : தெரியவில்லை.
தொகுப்பித்தவர் : பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
கடவுள் வாழ்த்து பாடியவர் :பாரதம் பாடிய பெருந்தேவனார்.
தெய்வம் :திருமால்.
குறுந்தொகை :
பாடல்கள் : 400.
புலவர்கள் : 205.
அடிகள் : 4-8.
பொருள் :அகம்.
தொகுத்தவர் : பூரிக்கோ.
தொகுப்பித்தவர் : தெரியவில்லை.
கடவுள் வாழ்த்து பாடியவர் :பாரதம் பாடிய பெருந்தேவனார்.
தெய்வம் : முருகன்.
ஐங்குறுநூறு :
பாடல்கள் : 500.
புலவர்கள் : 5.
அடிகள் : 3-6.
பொருள் :அகம்.
தொகுத்தவர் : புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
தொகுப்பித்தவர் : யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
கடவுள் வாழ்த்து பாடியவர் :பாரதம் பாடிய பெருந்தேவனார்.
தெய்வம் : சிவன்.
கலித்தொகை :
பாடல்கள் : 150.
புலவர்கள் : 5.
அடிகள் : 11-80.
பொருள் :அகம்.
தொகுத்தவர் : நல்லாத்துவனார்.
தொகுப்பித்தவர் : தெரியவில்லை.
அகநானூறு :
பாடல்கள் : 400.
புலவர்கள் : 145.
அடிகள் : 13-31.
பொருள் :அகம்.
தொகுத்தவர் : உருத்திரசன்மனார்.
தொகுப்பித்தவர் : பாண்டியன் உக்கிர பெருவழுதி.
கடவுள் வாழ்த்து பாடியவர் :பாரதம் பாடிய பெருந்தேவனார்.
தெய்வம் : சிவன்.
புறநானூறு :
பாடல்கள் : 400.
புலவர்கள் : 158.
அடிகள் : 4-40.
பொருள் : புறம்.
தொகுத்தவர் : தெரியவில்லை.
தொகுப்பித்தவர் : தெரியவில்லை.
கடவுள் வாழ்த்து பாடியவர் :பாரதம் பாடிய பெருந்தேவனார்.
தெய்வம் : சிவன்.
பதிற்றபத்து :
பாடல்கள் : 100.
புலவர்கள் : 8.
அடிகள் : 8-57.
பொருள் : புறம்.
தொகுத்தவர் : தெரியவில்லை.
தொகுப்பித்தவர் : தெரியவில்லை.
பரிபாடல் :
பாடல்கள் : 70.
புலவர்கள் : 13.
அடிகள் : 25-400.
பொருள் : அகம் மற்றும் புறம்.
தொகுத்தவர் : தெரியவில்லை.
தொகுப்பித்தவர் : தெரியவில்லை.
எட்டுத்தொகை நூல்களின் சிறப்பு பெயர்கள் நூல்கள் :
- எட்டுத்தொகை - எண்பெருந்தொகை.
- நற்றிணை - நற்றிணை நானூறு,தூதின் வழிகாட்டி.
- குறுந்தொகை - நல்ல குறுந்தொகை, குறுந்தொகை நானூறு.
- பதிற்றுப்பத்து - இரும்புக் கடலை.
- பரிபாடல் - பரி பாட்டு, ஓங்கு பரிபாடல், இசைப்பாட்டு, பொருட்கலவை நூல், தமிழின் முதல் இசைப்பாடல்.
- கலித்தொகை - கலி, குறுங்கலி, கற்றறிந்தோர் ஏத்தும் கலி, கல்விவலார் கண்ட கலி, அகப்பாடல் இலக்கியம்.
- அகநானூறு - அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, நெடுந்தொகை நானூறு, நெடும்பாட்டு, பெருந்தொகை நானூறு.
- புறநானூறு - புறம், புறம் பாட்டு, புறம்பு நானூறு, தமிழ் வரலாற்று பெட்டகம், தமிழர் களஞ்சியம், திருக்குறளின் முன்னோடி .
No comments:
Post a Comment