Wednesday, October 05, 2022

TNPSC G.K - 181 | பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு - எல்லாரும் இன்புற.

பராபரக் கண்ணி :


தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்

செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!

அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே

-தாயுமானவர்

சொல்லும் பொருளும் :


  • தண்டருள் - குளிர்ந்த கருணை
  • பராபரமே - மேலான பொருளே
  • செம்மையருக்கு - சான்றோருக்கு
  • எல்லாரும் - எல்லா மக்களும்
  • ஏவல் - தொண்டு
  • அல்லாமல் - அதைத்தவிர
  • கூர் - மிகுதி
  • எய்தும் - கிடைக்கும்
  • பணி - தொண்டு

நூல் வெளி :


  • தாயுமானவர். திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர்.
  • இப்பாடல் தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது.இந்நூலைத் "தமிழ் மொழியின் உபநிடதம்" எனப் போற்றுவர்.
  • ‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

நீங்கள் நல்லவர் :


  • வாழ்க்கை பின்திரும்பிச் செல்லாது
  • நேற்றுடன் ஒத்துப் போகாது

நூல் வெளி :


  • கலீல் கிப்ரான் - லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.
  • கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.
  • இப்பாடல் கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

பசிப்பிணி போக்கிய பாவை :


  • "தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதியார்.
  • மணிமேகலை - பூம்புகார் தீவைச் சேர்த்தவள்.
  • மணிபல்லவ தீவிற்கு மணிமேகலையை - மணிமேகலா தெய்வம் அழைத்துச் சென்றது.
  • தீவதிலகை-புத்த பீடிகையைக் காவல் செய்பவள்.
  • கோமுகி - பொய்கை - (கோ- பசு) (முகி- முகம்) பசுவின் முகம்போல இருப்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.
  • வைகாசித் திங்கள் -முழு நிலவு நாளில் இப்பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும்.
  • அமுதசுரபியில் உணவு இட்டவள் - ஆதிரை.

பாதம் :


  • எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
  • நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன
  • உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் மற்றும் தாவரங்களின் உரையாடல் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

பெயர்ச்சொல் :


  • ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.
    • பொருட்பெயர்
    • இடப்பெயர்
    • காலப்பெயர்
    • சினைப்பெயர்
    • பண்புப்பெயர்
    • தொழிற்பெயர்

பொருட்பெயர் :

  • பொருளைக் குறிக்கும் பெயர். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும். (எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.
  • இடப்பெயர்
  • ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர். (எ. கா.) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.

காலப்பெயர் :

  • காலத்தைக் குறிக்கும் பெயர். (எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.

சினைப்பெயர் :

  • பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர். (எ.கா.) கண், கை, இலை, கிளை.

பண்புப்பெயர் :

  • பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர். (எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.

தொழிற்பெயர் :

  • தொழிலைக் குறிக்கும் பெயர். (எ.கா.) படித்தல், ஆடுதல், நடித்தல்.
  • இடுகுறிப்பெயர், காரணப்பெயர்
  • இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.

இடுகுறிப்பெயர் :

  • சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும். (எ.கா.) மண், மரம், காற்று
  • இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப்பெயர் என இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.

இடுகுறிப் பொதுப்பெயர் :

  • ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும். (எ.கா.) மரம், காடு.

இடுகுறிச் சிறப்புப்பெயர் :

  • ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும். (எ.கா.) மா, கருவேலங்காடு.

காரணப்பெயர் :

  • சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும். (எ.கா.) நாற்காலி, கரும்பலகை
  • காரணப் பொதுப்பெயர், காரணச் சிறப்புப்பெயர் எனக் காரணப் பெயர் இரு வகைப்படும்.

காரணப் பொதுப்பெயர் :

  • காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும். (எ.கா.) பறவை, அணி

காரணச் சிறப்புப்பெயர் :

  • குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும். (எ.கா.) வளையல், மரங்கொத்தி,

அன்பினில் இன்பம் காண்போம்;

அறத்தினில் நேர்மை காண்போம்;

துன்புறும் உயிர்கள் கண்டால்;

துரிசறு கனிவு காண்போம்;

வன்புகழ் கொடையிற் காண்போம்;

வலிமையைப் போரில் காண்போம்;

தன்பிறப் புரிமை யாகத்

தமிழ்மொழி போற்றக் காண்போம்.

- அ.முத்தரையனார், மலேசியக் கவிஞர்

கலைச்சொல் அறிவோம் :


  • • அறக்கட்டளை - Trust
  • • தன்னார்வலர் - Volunteer
  • • இளம் செஞ்சிலுவைச் சங்கம்- Junior Red Cross
  • • சாரண சாரணியர் - Scouts & Guides
  • • சமூகப் பணியாளர் - Social Worker

No comments:

Popular Posts