Wednesday, October 05, 2022

TNPSC G.K - 175 | பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு - இயற்கை.

சிலப்பதிகாரம் :


திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்

அங்கண் உலகு அளித்த லான் ...


மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் 

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல் 

மேல்நின்று தான் சுரந்தலான் -சிலப்பதிகாரம்...

சொல்லும் பொருளும் :


  • திங்கள் - நிலவு
  • பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில்
  • திகிரி - ஆணைச் சக்கரம்
  • நாமநீர் -அச்சம் தரும் கடல்
  • கொங்கு - மகரந்தம்
  • மேரு - இமயமலை
  • அலர் - மலர்தல்
  • அளி - கருணை

பொதுவானக்குறிப்புகள் :


  • சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள்.
  • சேர மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
  • இவர் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு.
  • சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று.
  • தமிழின் முதல் காப்பியம்.
  • இது முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது.
  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள்.
  • திங்கள், ஞாயிறு, மழை -என இயற்கை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது.

காணி நிலம் :


காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும் - அங்குத்

தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் ……

சித்தம் மகிழ்ந்திடவே -நன்றாய் இளம்

தென்றல் வர வேணும்.

– பாரதியார்

சொல்லும் பொருளும் :


  • காணி - நில அளவைக் குறிக்கும் சொல்.
  • மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்.
  • சித்தம் - உள்ளம்.

பொதுவானக்குறிப்புகள் :


  • இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் – பாரதியார்.
  • சுப்ரமணியம் இயற்பெயர்.
  • எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் பெற்றவர்.
  • பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு இவரின் படைப்புகள்.

சிறகின் ஓசை :


  • பறவைகள் இடம் பெயர்தல் வலசை போதல்
  • நிலவு, விண்மீன், புவியீர்ப்பு விசை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பறவைகள் இடம்பெயர்கின்றன.

வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் :


  • தலையில் சிறகு வளர்தல்.
  • இறகுகளின் நிறம் மாறுதல்.
  • உடலில் கற்றையாக முடி வளர்தல்.

டாக்டர் சலீம் அலி :


  • இந்தியாவின் பறவை மனிதர் - டாக்டர் சலீம் அலி.
  • தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ எனப் பெயரிட்டார் (The fall of Sparrow).
  • தற்கால பறவையியல் ஆய்வாளர்களின் முன்னோடி சலீம் அலி.

பொதுவானக்குறிப்புகள் :


  • சிறகு அடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை - கப்பல் பறவை (Frigate Bird)
  • இது தரையில் இறங்காமல் 400 கிலோமீட்டர் வரை பறக்கும் கப்பல் கூழைக்கடா - கடற்கொள்ளை பறவை என்றும் அழைக்கப்படும்
  • நாராய் நாராய் செங்கால் நாராய் என்று சத்திமுத்தப் புலவர் வலசைபோதலை பற்றிப் பாடியுள்ளார்
  • தென்திசை குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்’ எனக் குறிப்பிட்டுள்ளார்
  • காக்கை குருவி எங்கள் சாதி - என்று பாரதியார் பாடினார்
  • உலகிலேயே நெடுந்தொலைவு 22 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்யும் பறவை இனம் ஆர்டிக் ஆலா
  • பறவையைப் பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY)
  • உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20

கிழவனும் கடலும் :


  • (The old man and the sea) எனும் ஆங்கில புதினம்.
  • 1954 நோபல் பரிசு பெற்றது.
  • இதன் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே.

முதலெழுத்தும் சார்பெழுத்தும் :


எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்

  1. முதலெழுத்து
  2. சார்பெழுத்து

முதல் எழுத்து :


உயிர் மெய் எழுத்துக்கள் 12 மெய்யெழுத்துக்கள் 18 ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்

பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே முதல் எழுத்து என்பர்.

சார்பு எழுத்துக்கள் :


பத்து வகைப்படும்.

  1. உயிர்மெய்
  2. ஆயுதம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. மகரக் குறுக்கம்
  9. ஔகாரக் குறுக்கம்
  10. ஆய்தக் குறுக்கம்

உயிர்மெய் :


  • மெய் எழுத்துக்களும் உயிரெழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் தோன்றுபவை
  • உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்
  • வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிரெழுத்தை ஒத்திருக்கும்.

ஆய்தம் :


  • மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
  • முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை , அஃகேனம் என்று வேறு பெயர்கள் உண்டு
  • நுட்பமான ஒலிப்புமுறை உடையது.
  • முன் ஒரு குறில் எழுத்தையும் பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  • தனித்து இயங்காது.
  • முதலெழுத்துக்கள் ஆகிய உயிரையும் மெய்யையும் சார்ந்து வருவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்தாகும்.

திருக்குறள் :


  • அறநூல்களில் ’உலகப்பொதுமறை’ எனப் போற்றப்படுவது .
  • திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
  • வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் என்ற சிறப்புப் பெயர்கள் உண்டு.
  • திருக்குறள்: அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் -என மூன்று பிரிவுகள் கொண்டது.
  • 133-அதிகாரங்கள் 1330-குறட்பாக்கள் கொண்டது.
  • உலகப்பொதுமறை, வாயுறைவாழ்த்து எனச் சிறப்புப் பெயர்கள் கொண்டது திருக்குறள்.
  • நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

கலைச்சொல் அறிவோம் :


  • கண்டம் - continent.
  • வலசை - migration.
  • தட்பவெப்ப நிலை - climate.
  • புகலிடம் - sanctuary.
  • வானிலை - weather.
  • புவியீர்ப்பு புலம் - gravitational field.

No comments:

Popular Posts