Sunday, October 02, 2022

TNPSC G.K - 156 | மொகலாயர் ஆட்சி.

  • துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் பாபர், செங்கிஸ்கான், தைமூர் - ஆகிய இருவருக்கும் உறவினர் பாபர்.

  • பஞ்சாபைச் சேர்ந்த தௌலத்கான் லோடி, இந்தியா மீது படையெடுக்க பாபரை அழைத்தார்.

  • கிபி 1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பானிபட் இப்ராஹிம் லோடியை வென்று மொகலாய வம்சத்தை நிறுவினார்.

  • பாபர் பாபரின் சுயசரிதை : பாபர் நாமா (துருக்கி மொழி) .

  • பாபருக்குப் பின் ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார் .

  • ஹுமாயூன்,நாட்டை இழந்து தவித்தபோது அமரக்கோட்டையில் அக்பர் பிறந்தார் .

  • ஷெர்ஷாவிடம் தோற்று நாடிழந்த ஹுமாயூன், பின் இரான் அரசரின் உதவியுடன் நாட்டை மீட்டார் .

  • ஹுமாயூன் தனது நூலகத்தின் மாடிப்படிகளில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

  • ஹுமாயூன் நாமா என்ற நூலை அவரது சகோதரியான குல்பதன் பேகம் எழுதினார் .

  • தாய்மாமன் பைராம்கான் உதவியுடன் அக்பர் தனது 13-வது வயதில் ஆட்சிக்கு வந்தார் .

  • கிபி 1556 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் பானிபட் போரில் அக்பர், ஹெமுவைத் தோற்கடித்தார் .

  • அக்பரின் அவையை அலங்கரித்த அறிஞர்கள், நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்டார்கள் .

  • அக்பரின் அவையிலிருந்த அபுல் பாசல், அக்பர் நாமா, அயனி அக்பரி என்ற நூல்களை எழுதினார் .

  • அக்பரின் அவையிலிருந்த துளசிதாஸர், இந்தியில் எழுதிய ராமாயணத்தின் பெயர் : ராமசரித மானஸ் .

  • அக்பரின் அவையிலிருந்த பாடகர் : தான்சேன் .

  • அக்பரின் ராணுவ அமைச்சர் : ராஜா மான்சிங் .

  • வருவாய்த்துறை அமைச்சர் : ராஜா தோடர்மால் .

  • புத்திசாலி அமைச்சர் : பீர்பால் .

  • அக்பர் தோற்றுவித்த மதம் : தீன் இலாஹி (தெய்வீக மதம்).

  • இந்துக்கள் மீது விதிக்கப்பட்ட 'ஜசியா' வரியை அக்பர் நீக்கினார் .

  • அக்பருடைய ராணுவ நிர்வாக முறைக்கு பெயர்: மன்சப்தாரி முறை .

  • அக்பர் தக்காண வெற்றியைக் கொண்டாட பதேபூர் சிக்ரி நகரை நிர்மாணித்து, புலந்த் தர்வாஸா எனும் வாசலை அமைத்தார் .

  • அக்பருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த ஜஹாங்கீரின் இயற்பெயர்: சலீம் .

  • ஜஹாங்கீரை மணந்த நூர்ஜஹானின் இயற்பெயர் : மெஹருன்னிஸா .

  • ஓவியக்கலை ஜஹாங்கீர் காலத்தில் உச்சநிலையில் இருந்தது .

  • ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜுன்சிங், ஜஹாங்கீரால் கொலை செய்யப்பட்டார் .

  • இந்தியாவிலேயே பெரிய மசூதி: ஷாஜஹான் கட்டிய ஜும்மா மசூதி .

  • தாஜ்மஹாலை வடிவமைத்தவர் உஸ்தாத் இசா என்ற கட்டடக்கலை வல்லுநர் .

  • ஷாஜஹானின் மனைவி மும்தாஜின் இயற்பெயர்: அர்ஜுமான் பானுபேகம்.

  • ஔரங்கசீப்-ன் இயற்பெயர்: ஆலம்கீர் .

  • ஔரங்கசீப் 'உயிர் வாழும் புனிதர்' என அழைக்கப்பட்டார் .

  • ஒன்பதாவது சீக்கிய குருவான தேஜ்பகதூர், ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்டார்.

  • ஜசியா வரியை மீண்டும் இந்துக்கள் மீது விதித்தவர் : ஔரங்கசீப்.

No comments:

Popular Posts