Thursday, September 29, 2022

TNPSC G.K - 137 | பொதுத்தமிழ்

  • மழைமுகம் காணாப் பயிர் போல - வாட்டம்.

  • மறக்குடி மகளிரின் மறப்பண்பைப் பாராட்டுவதென்பது - மூதில் முல்லை.

  • மறைமலையடிகளாரின் இயற்பெயர் என்ன - சுவாமிவேதாசலம்.

  • மன்னிப்பு எம்மொழிச் சொல் - உருது.

  • மான்மியம்' என்பதன் பொருள் என்ன - தலபுராணம்.

  • முகந்து என்பதின் பிழைத்திருத்தம் - முகர்ந்து.

  • முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி.

  • முதல் கலம்பக நூல் - நந்திக் கலம்பகம்.

  • முதல் தூது இலக்கியம் - நெஞ்சுவிடு தூது

  • முதற் சங்க காலத்து இலக்கண நூல் - அகத்தியம்.

  • முதன்முதலில் எழுந்த தமிழ் மொழி பெயர்ப்புக் காப்பியம் எது - பெருங்கதை.

  • முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார் - குமரகுருபரர்.

  • முயற்சி திருவினையாக்கும் எவ்வகை வாக்கியம் - செய்தி வாக்கியம்.

  • முயற்சி திருவினையாக்கும் என்பது எவ்வகை வாக்கியம் - செய்தி வாக்கியம்.

  • முழுங்கு என்பதின் பிழைத்திருத்தம் - விழுங்கு.

  • மூத்த பள்ளி என்பது மூக்கூடல் எனில், இளைய பள்ளி - மருதூர்.

  • மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் உடைய நூல் - ஐங்குறுநூறு.

  • மெய்ப்பாடுகளின் வரிசையில் நான்காவது இடம் பெறுவது - மருட்கை.

  • மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி.

  • மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர் - பேரறிஞர் அண்ணா.

  • மோ' என்னும் எழுத்து குறிக்கும் பொருள் என்ன - முகர்தல்.

  • மோர்ந்து என்பதின் பிழைத்திருத்தம் - மோந்து.

  • யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது - அகநானூறு.

  • யாருடைய கல்வி இனிமை பயக்கும் - அவைக்கு அஞ்சாதவனின்.

  • யாழ் என்ற நூலினை எழுதியவர் - விபுலானந்தர்.

  • ராவ்பகதூர் என்றழைக்கப்படுபவர் - மனோன்மணியம் சுந்தரனார்.

  • வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்.

  • வசைக்கவி என்றழைக்கப்படுபவர்- காளமேகப் புலவர்.

  • வட்டாரக் கதைகளின் முன்னோடி என்றழைக்கப்படுபவர் - கி.ராஜ நாராயணன்.

  • வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை.

  • வள்ளலார் என்று போற்றப்படுபவர்- இராமலிங்க அடிகளார்.

  • வள்ளுவனைப் பெற்றதால்: பெற்றதே புகழ் வையகமே" எனப் பாடியவர் யார் - பாரதிதாசன்.

  • வாக்கியத்தில் ஒரு எழுவாய் ஒரு பயனிலை பெற்று வந்தால் அது - தனிவாக்கியம்.

  • வாக்குண்டாம் என்பது எந்த நூலின் வேறு பெயர் - மூதுரை.

  • விக்குறான் என்பதின் பிழைத்திருத்தம் - விற்கிறான்.

  • விடுதலைக்கவி என்றழைக்கப்பட்டவர் யார் - பாரதியார்.

  • விமர்சனக்கலை எனும் நூலை எழுதியவர் - கநாசுப்ரமணியன்.

  • வியா இலங்குவரை உந்திய தோள்களை இப்பாடல் இடம் பெறும் நூல் எது - தேவாரம்.

  • விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது.

  • வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடையளித்தல் - நேர் விடை.

  • வினையே ஆடவர்க்கு உயிரே இடம் பெற்றுள்ள இலக்கியம் - குறுந்தொகை.

  • வீரசோழியம் ஆசிரியர் - பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்.

  • வீரசோழியம் எந்தச் சமயத்தைச் சார்ந்த இலக்கண நூல் - பவுத்தம்.

  • வீரமாமுனிவர் இயற்பெயர் - கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி.

  • வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - இத்தாலி.

  • வீரம், கொடை போன்றவற்றைச் சிறப்பிக்கும் திணை - புறத்திணை.

  • வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின் முல்லை.

  • வெங்கலம் என்பதின் பிழைத்திருத்தம் - வெண்கலம்.

  • வெண்டேர்ச் செழியனின் காலம் - இடைச்சங்க காலம்.

  • வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை.

  • வெண்ணை என்பதின் பிழைத்திருத்தம் - வெண்ணெய்.

  • வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் - வச்சநந்திமாலை.

  • வெற்றி தரும் இறைவியின் அருளுடைமையைப் பாராட்டுதல் என்பது - கொள்ளவை நிலை.

  • வென்னீர் என்பதின் பிழைத்திருத்தம் - வெந்நீர்.

  • வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்.

  • வேத உதாரணத் திரட்டு ஆசிரியர்- இரேனியஸ்.

  • வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர்.

  • வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் - நீதிநூல்.

  • வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் - ராஜம் கிருஷ்ணன்.

  • வேர்சொல்லை அறிந்து எழுதுக: "கண்டேன்” - காண்.

  • வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்.

  • வேளாண் வேதம் எனப்படும் நூல் - நாலடியார்.

  • வைகறைப் பொழுதுக்குரிய நிலம் - மருதம்.

  • வைணவ சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறிய புலவர் யார் - காளமேகப் புலவர்.

  • வைதாலும் வழுவின்றிவைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர்.

  • வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்.

  • வைர வியாபாரி இடம்பெறும் நூல் - வளையாபதி.

  • ஜியுபோப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் - புறநானூறு.

  • ஜீவகாருண்யம் போதித்தவர் - வள்ளலார்.

  • ஜீவபூமி நாவலாசிரியர் - சாண்டில்யன்.

  • ஸ்வர்ணகுமாரியின் சிறுகதையாசிரியர் - பாரதியார்.

No comments:

Popular Posts