Thursday, September 29, 2022

TNPSC G.K - 136 | பொதுத்தமிழ்

  • பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் - அகிலன்.

  • பாவலரேறு என்றழைக்கப்படுபவர் - பெருஞ்சித்திரனார்.

  • பிரபந்த வேந்தர் என அழைக்கப்படுபவர் - குமரகுருபரர்.

  • பிரபந்தம் பொருள் தருக - நன்கு கட்டப்பட்டது.

  • பிரபுலிங்க லீலை என்ற நூலை இயற்றியவர் - சிவப்பிரகாசர்.

  • பிரமிள் என்றழைக்கப்படுபவர் - தருமு சிவராமு.

  • பிரித்து எழுதுக: வையந்தழைக்கும் - வையம் + தழைக்கும்.

  • பிரித்தெழுதுக: "தீந்தேன்” - தீம்+தேன்.

  • புகழ்வது போலப் பழிப்பது எவ்வகை அணி - வஞ்சப்புகழ்ச்சி அணி.

  • புதுக்கவிதைகளின் முன்னோடி என்றழைக்கப்படுபவர் - ந பிச்சமூர்த்தி.

  • புதுக்கவிதைகளின் முன்னோடி என்றழைக்கப்படுபவர் - பாரதியார்.

  • புதுக்கவிதைப் புரவலர் என்றழைக்கப்படுபவர் - சிசுசெல்லப்பா.

  • புதுமைக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் - வாணிதாசன்.

  • புதுவைக்குயில் என்றழைக்கப்படுபவர் - பாரதிதாசன்.

  • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை

  • புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை.

  • புஷ்பவல்லி என்னும் நாடகத்தினை இயற்றியவர் - பம்மல் சம்பந்த முதலியார்.

  • பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்.

  • பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்.

  • பூவோடு சேர்ந்த நார் போல - உயர்வு.

  • பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்கும் குமரி என்றழைக்கப்படும் மூலிகை எது - சோற்றுக்கற்றாழை.

  • பெண்கள் நெல்குற்றும் போது பாடும் பாட்டு எது - வள்ளைப்பாட்டு.

  • பெரியபுராணத்தின் ஆசிரியர் யார் - சேக்கிழார்.

  • பெரியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ் - குடியரசு.

  • பெருமையும் எழிலும் பொருந்திய பத்மநாபனின் கையில் இருப்பது எது - சக்கரம்.

  • பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ்நூல் - திருவாசகம்.

  • பெறகு என்பதின் பிழைத்திருத்தம் - பிறகு.

  • பேரகராதி பிரித்தெழுதுக - பெருமை + அகராதி.

  • பேரன் என்பதின் பிழைத்திருத்தம் - பெயரன்.

  • பைந்தமிழ்த் தேர்பாகன் என்று பாரதிதாசனால் சிறப்பிக்கப்படுபவர் - பாரதியார்.

  • பொருநராற்றுப்படையின் ஆசிரியர் - முடத்தாமக் கண்ணியார்.

  • போரில் ஆயிரம் யானைகளைக் கொன்றவனைப் பற்றி பாடுவது - பரணி.

  • போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த வீரனின் உடலை அவன் மனைவி தழுவுதல் என்பது- சிருங்கார நிலை.

  • மகாககோபாத்தியாய என்று (சென்னை ஆங்கில அரசால்) அழைக்கப்படுபவர் - உவேசாமிநாதர்.

  • மக்கள் என்பது ஒரு - உயர்திணை பன்மை.

  • மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

  • மணநூல் என சிறப்பிக்கப் படுவது - சீவகசிந்தாமணி.

  • மணிமேகலை எந்தச் சமயக் காப்பியம் - புத்த சமயம்.

  • மணிமேகலைக்கு துறவு தந்தவர் - அறவண அடிகள்.

  • மண்டல புருடர் இயற்றிய ஸ்ரீபுராணம் என்பது - மணிப்பிரவாள நடை.

  • மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்.

  • மதயானை முகவன்' என்றழைக்கப்படும் இறைவன் - பிள்ளையார்.

  • மதுரையில் திருமலை நாயக்கர் கட்டிய மண்டபம் - திருமலை நாயக்கர் மஹால்.

  • மந்திரமும் சடங்குகளும் எனும் நூலை எழுதியவர் - ஆசிவசுப்பிரமணியன்.

  • மயிற்பொறி விமானத்தின் செயல் திறனைப் பற்றிக் கூறும் நூல் - சீவகசிந்தாமணி.

  • மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர், புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் எனப் பாராட்டப்படுபவர் - அப்துல் ரகுமான்.

  • மரம், செடி, மின்விசிறி, நாற்காலி என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - பொருட்பெயர்.

  • மருந்துப் பொருட்கள் பற்றி அதிகமாகக் கூறப்பட்ட நூல்கள் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.

  • மலர்களின் பருவம் எத்தனை? யாவை - 7 அரும்பு, மொட்டு, முகை,மலர், அலர், வீ, செம்மல்.

  • மழை காணாப் பயிர் போல - வறட்சி.

No comments:

Popular Posts