Thursday, September 29, 2022

TNPSC G.K - 129 | பொதுத்தமிழ்

  • அகண்ட என்பதின் பிழைத்திருத்தம் - அகன்ற.

  • அகத்திணைகளின் எண்ணிக்கை யாவை - ஏழு.

  • அகத்திணைக்கே உரிய கோட்பாடு என்பது - உள்ளுறை உவமம்.

  • அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை - 12.

  • அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு.

  • அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்ட நூல் - அகநானூறு (அல்லது) நெடுந்தொகை.

  • அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் - பாலைத்திணை.

  • அகநானூற்றில் 10,20,30,40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள் - நெய்தல்திணை.

  • அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும் திணைப்பாடல்கள் - குறிஞ்சித்திணை.

  • அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள் - முல்லைத்திணை.

  • அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள் - மருதத்திணை.

  • அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் - நோய்பாடியார், ஊட்டியார்.

  • அகநானூற்றின் அடிவரையறை - 1331 அடிகள்.

  • அகநானூற்றின் இரண்டாம் பகுதி - மணிமிடைப்பவளம்.

  • அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் - வேங்கடசாமி நாட்டார், இராவெங்கடாசலம்பிள்ளை.

  • அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை - 90.

  • அகநானூற்றின் பிரிவுகள் எத்தனை மற்றும் யாவை - 3 பிரிவுகள் களிற்றுயானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை.

  • அகநானூற்றின் முதல் பகுதி - களிற்றுயானை நிரை.

  • அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர் - களியாற்றினை நிரை.

  • அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் - வேஇராசகோபால்.

  • அகநானூற்றுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் - நெடுந்தொகை.

  • அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை யாது - 13 அடி முதல் 31 அடி வரை.

  • அகப்பாடல்களும் புறப்பாடல்களும் கலந்த தொகை நூல் - பரிபாடல்.

  • அகப்பொருள் விளக்கம் நூலை இயற்றியவர் யார் - நாற்கவிராசநம்பி.

  • அடமழை என்பதின் பிழைத்திருத்தம் - அடைமழை.

  • அணியிலக்கண நூல்களுள் முதன்மையானது - தண்டியலங்காரம்.

  • அணியிலக்கணமுதல் நூல் எது- தண்டியலங்காரம்.

  • அது அல்ல என்பதின் பிழைத்திருத்தம் - அது அன்று.

  • அதுகள் என்பதின் பிழைத்திருத்தம் - அவை.

  • அத்துவானம் என்பது - ஆள் இல்லாத பகுதி.

  • அபிதான கோஷம் எனும் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர் - முத்துத் தம்பிப்பிள்ளை.

  • அமக்களம் என்பதின் பிழைத்திருத்தம் - அமர்க்களம்.

  • அரண்மனையைச் சேர்ந்த நாடக அரங்கினை எவ்வாறு அழைக்கலாம் - நாயகப்பத்தி.

  • அழகிய மணவாளதாசர் என்றழைக்கப்படுபவர் - பிள்ளை பெருமாள் ஐயங்கார்.

  • அறத்துப் பாலில் அமைந்துள்ள இயல்கள் - பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்.

  • அறிவியல் தொழில்நுட்பங்களை தனது சிறுகதையில் புகுத்தியவர் - சுஜாதா.

  • அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன்.

  • அனலில் விழுந்த புழுப்போல - தவிப்பு.

  • ஆண்டாளின் இயற்பெயர் - கோதை.

  • ஆதரவற்றவர்களுக்காக அவ்வை இல்லத்தை ஆரம்பித்தவர் யார் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

  • ஆத்துக்கு என்பதின் பிழைத்திருத்தம் - அகத்துக்கு.

  • ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு நாய கன்போர்க் குகன் எனும் நாமத்தான்' என்ற கம்பராமாயணப் பாடலில் வரும் அம்பி என்ற சொல்லின் பொருள் என்ன - படகு.

  • ஆழ்வார்க்குறிச்சி, மொடக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் வாழும் மக்கள் யாவர் - புலம் பெயர்ந்த குறிஞ்சி நில மக்கள்.

  • ஆளுடைய அரச என அழைக்கப்படுபவர் - அப்பர்.

  • ஆளுடைய பிள்ளை என அழைக்கப்படுபவர் - திருஞானசம்பந்தர்.

  • ஆற்றுணா என்பது - வழிநடை உணவு.

  • ஆற்றுணா' என்பது - வழிநடை உணவு.

  • இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை - அடியார்க்கு நல்லார் உரை.

  • இசைச் சங்க இலக்கியங்கள் - குருகு, வெண்டாழி, வியாழமாலை அகவல்.

  • இசைப் பெரும்புலவர் என்றழைக்கப்படுபவர் - இராமலிங்க அடிகள்.

  • இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் - குறவஞ்சி.

  • இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் - 3700.

  • இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 59.

No comments:

Popular Posts